Breaking

ஜனவரி-02. இந்திய விலங்கியல் மருத்துவர், ஊர்வனவியலாளர் (herpetologist), இன்றைய அறிவியல் எனும் அறிவியல் பத்திரிகையின் ஆசிரியர்-கோயம்புத்தூர் நாராயண ராவ் ராகவேந்திரன் (Coimbatore Narayana Rao Raghavendran) மறைந்த தினம்.






இன்று நினைவு நாள்:- ஜனவரி-02.


இந்திய விலங்கியல் மருத்துவர், ஊர்வனவியலாளர் (herpetologist), இன்றைய அறிவியல் எனும் அறிவியல் பத்திரிகையின்  ஆசிரியர்-கோயம்புத்தூர் நாராயண ராவ் ராகவேந்திரன்
(Coimbatore Narayana Rao Raghavendran) மறைந்த தினம்.


பிறப்பு:-


ஆகஸ்ட்-15, 1882 ஆம் ஆண்டு,
கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியாவில் பிறந்தார்.
பெல்லாரியில் தனது பட்டப்படிப்பை பயின்றார்.
கராக்பூர் இந்திய தொழில்நுட்பக் கழகத்திலிருந்து பட்டம் பெற்றார். யுனைடெட், கார்னெல் பல்கலைக்கழகத்தில் உயர்நிலைப் படிப்புகளையும் பயின்று முடித்தார்.
பிறகு, பட்டப்படிப்பினை பேராசிரியர் ஹெண்டர்சனின் கீழ் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்று தங்க பதக்கம் பெற்றார். 


பணிகள்:-


கோயம்புத்தூர் மற்றும் எர்ணாகுளத்தில் கற்பித்தல் பணியேற்றார்.


பெங்களூரில் உள்ள மத்திய கல்லூரியில் பணியாற்றினார். அங்கு உயிரியல் துறையை ஒருங்கமைத்து விலங்கியல் தலைவராக செயல்பட்டார்.


1938 ல் லாகூரில் இந்திய அறிவியல் காங்கிரஸின் விலங்கியல் பிரிவிற்கு  தலைமை பதவி வகித்தார்.


தவளை வகைப்படுத்துதல்:-




ஆய்வுகளைப் பல்கலைக்கழக கல்வியோடு ஒருங்கிணைப்பில் அவர் ஈடுபட்டுள்ளதால், அறிவியல் மற்றும் ஆராய்ச்சியில் அவரது பங்கு குறிப்பிடத்தக்கதாகக் கருதப்படுகிறது. சர் மார்ட்டின் ஆன்ஸ்லோ ஃபோஸ்டர் மற்றும் பிற இந்திய விஞ்ஞானிகளுடன் இணைந்து 
ஜூலை- 1932 இல் "நேச்சர் இதழைப்" போன்ற மற்றொரு இதழான "தற்போதைய அறிவியல்" இதழை தொடங்கினார். அதன் முதன்மை ஆசிரியராக இருந்தார். 
அவரது முதல் தலையங்கங்களில் ஒன்று, இந்தியாவில் விஞ்ஞான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, இந்திய அறிவியல் அகாதமி உருவாக உதவியது.
மேலும் இவர், தவளைகள் பற்றி வகைபிரித்தல் (Frogs and their Taxonomy)
ஆய்வுப் பணியில் சிறந்து விளக்கக்கூடியவர். பல தவளை வகைகளை அவர் பெயரிட்டும் விளக்கியுள்ளார். இவர், அர்பன்டெரிக் (Archenteric)மற்றும் சிக்மண்டேசன் தவளைகளின் வாழ்வாதார வளர்ச்சியைப் பற்றிய (Segmentation Cavities of frogs) நமது புரிதலுக்கு தெளிவாக விளக்கியது, முக்கிய பங்களிப்பாகக் கருதப்படுகிறது. அவர் புதிய மைக்ரோலைட் (Microhylid) இனமான ராமானேலாவைப் (Ramanella)
பற்றியும் விவரித்தார். 




விருதுகள்:-



2011 ஆம் ஆண்டில், இந்தியாவின் பத்மஸ்ரீ விருதை இவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


இறப்பு:-


ஜனவரி-02, 1960 ஆம் ஆண்டு, 
பெங்களூர், இந்தியாவில் மரணமடைந்தார்.


சிறப்புகள்:-


இந்திய நில நீர் உயிரினங்களின்  பணியை போற்றும் வகையில்,  அங்கீகரிப்பதற்காக, ராவ்ரெஸ்ட்டெஸ்(Raorchestes) என்ற இனத்திற்கு இவரது பெயரிடப்பட்டுள்ளது.

No comments:

Powered by Blogger.