நமக்கு சளி பிடித்தவுடன் மூக்கடைப்பு ஏற்படுகிறது அதை நாட்டு வைத்திய முறையில் சரி செய்வது பற்றி தெரிந்து கொள்வோம்
மழை மற்றும் குளிர் காலங்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மூக்கடைப்பு வரும்.
அது ஏனென்றால் நாம் ஈரக்காற்றை சுவாசிப்போம் அப்பொழுது சுவாசத்தில் நீர் தேங்கி மூக்கடைப்பு ஏற்படும்.
மேலும் ஈரத்தலையுடன் அதிகநேரம் இருப்பது இரவில் தூங்கும் பொழுதும் மூக்கடைப்பு ஏற்படும். இதற்கு நாம் இயற்கையான முறையில் வீட்டிலேயே மருந்து செய்து கொள்ளலாம்.
இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் எடுத்துமிதமாக சூடு செய்து அதில் ஒரு வெற்றிலையை பிச்சு போடுங்கள்.
பிறகு பச்சை கர்ப்பூரம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதனை போட்டு கரைந்தவுடன் வடிகட்டி வைத்து கொள்ளுங்கள்.
இதனை நமக்கு மூக்கில் அடைப்பு ஏற்படும் பொழுது ஒவ்வொரு சொட்டு விட்டால் போதும்.
அதற்குமேல் விடவேண்டாம். அப்பொழுதே அடைப்பு நீங்கிவிடும். இதில் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.


No comments: