Home
APRIL
ஏப்ரல்-19.பிரெஞ்சு இயற்பியலாளர், அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்ககண்டுபிடிப்புகளின் முன்னோடி-பியேர் கியூரி (Pierre Curie) மறைந்த நாள்.
ஏப்ரல்-19.பிரெஞ்சு இயற்பியலாளர், அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்ககண்டுபிடிப்புகளின் முன்னோடி-பியேர் கியூரி (Pierre Curie) மறைந்த நாள்.
08:34
Read
ஏப்ரல்-19.பிரெஞ்சு இயற்பியலாளர், அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்ககண்டுபிடிப்புகளின் முன்னோடி-பியேர் கியூரி (Pierre Curie) மறைந்த நாள்.
பிறப்பு:-
1859 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி பியேர் கியூரி பாரிசில் பிறந்தார். இவருடைய தந்தை டாக்டர் யூஜின் கியூரி, தாயார் சோபி கிளாரி டெபௌளி கியூரி. ஆவார்.
பியேர் கியூரிக்கு வீட்டிலேயே இளமைக் கல்வி தொடங்கப்பட்டது.
தனது 14 ஆம் வயதிலேயே இவருடைய கணித ஆர்வம் வெளிப்பட்டது.
16 வயதில் பல்கலைக் கழகப் படிப்பிற்காக நுழைந்தார். 18 வயதில் அமெரிக்காவில் முதுகலைக்கு நிகரான பட்டத்தைப் பெற்றார்.
கண்டுபிடிப்புகள்:-
ஜேக்குவிஸ் இவரது அண்ணனுடன் இணைந்து அழுத்த மின் விளைவினைக்
(Piezo Electric Effecr) கண்டுபிடித்தனர்.
அழுத்த மின்விளைவுத் தத்துவத்தைக் கண்டறிந்ததும் கியூரி சகோதரர்கள் பியூசோ மின் குவார்ட்சுமின்னோட்டமானியை உருவாக்கினர்.
இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இக்கருவி மேரி கியூரியின்ஆரம்ப கால ஆய்வுகளுக்குப் பயன்பட்டது.
பிறகு மைக்ரோபோன்,குவார்ட்சுகடிகாரஙக் ள், மின்கருவிகள் பலவற்றிலும் இத்தத்துவம் பயன்பட்டது.
முனைவர் பட்டம் பெறுவதற்கு முன் காந்தக் குணங்களைக் கண்டுபிடிப்பதற்காக இவர் 'முறுக்குத் தராசு' (Torsion Balance) ஒன்றை உருவாக்கினார்.
காந்தத்தால் தீவிரமாகப் பாதிக்கப்படும், ஓரளவு பாதிக்கப்படும், பாதிக்கப்படாத பொருள்கள் பற்றிய ஆய்வுகள் இவருடைய முனைவர் பட்டத்திற்கு இவரால் எடுத்துக்கொள்ளப்பட்டன.
கியூரி விதி:-
பாரா காந்தப் பொருள்கள் வெப்பத்தால் அடையும் மாற்றம் பற்றி இவரால் கண்டு பிடிக்கப்பட்ட விதிமுறை தான் இன்று 'கியூரி விதி' என்று அழைக்கப்படுகிறது.
மாறுநிலை வெப்பநிலைஅதிகமாகும்போது இரும்புக்காந்தப் பொருள்கள் தங்களுடைய காந்தத் தன்மையை இழந்துவிடும் என்பதையும் இவர் கண்டறிந்தார்.
இந்த வெப்ப நிலைதான் கியூரி புள்ளி (Curie Point) எனப்படுகிறது.
பொலோனியம்,
ரேடியம் முதலிய தனிமங்களைத் தனிமைப் படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
" கதிரியக்கம்" (Radioactivity) என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினர்.
மேரியின் முனைவர் பட்டத்திற்குரிய
ஆய்வுகளுக்கு பியேர் கியூரியால் வடிவமைக்கப்பட்ட 'படிக மின் அழுத்தமானி' மிகவும் பயன்பட்டது.
பியேரியும் அவருடைய மாணவர் ஒருவரும் சேர்ந்து ரேடியம்
துகள்களிலிருந்து வெளிவரும் வெப்ப ஆற்றலை உணர்ந்ததன் மூலம் அணுக்கரு ஆற்றல்குறித்த முதல் கண்டுபிடிப்பை வெளியிட்டனர்.
காந்தப் புலங்களைப் பயன்படுத்தி வெளியேறிய துகள்களில் ஆல்பாக் கதிர்கள், பீட்டாக் கதிர்கள், காமாக் கதிர்கள் (Alpha, beta and gamma rays) என கண்டுபித்தார்கள்.
கதிரியக்கத்தை அளக்கப் பயன்படும் அலகு கியூரி எனப்படும். ஒரு கியூரி என்பது நொடிக்கு 3.7x1010 சிதைவுகளை ஏற்படுத்தும் என்பது கணக்கீடு.
1910-ல் 'கதிரியக்கத் துறை காங்கிரஸ் '(Radiology Congress) என்ற அமைப்பு பியர் கியூரியைப் பெருமைப் படுத்த, கதிரியக்கத்தை அளக்க இந்த அலகை அறிமுகப்படுத்தியது.
நோபல் பரிசு:-
1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரிஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.
1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக தாவி விருது வழங்கப்பட்டது.
டேவி மெடல்-1903,
மேட்டூசி மெடல் -1904,
எலியட் க்ரஸன் பதக்கம்-1909.
மறைவு:-
1906 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் நாள் பாரிசில், ரியூடௌபைன் என்ற இடத்தில் சாலையின் குறுக்கே கடக்கும்போது விபத்தில் மரணம் அடைந்தார்.
சிறப்புகள்:-
கியூரி தம்பதியரைப் பெருமைப்படுத்தும் விதமாக பல அஞ்சல் தலைகள்வெளியிடப்பட்டன.
ஏப்ரல்-19.பிரெஞ்சு இயற்பியலாளர், அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்ககண்டுபிடிப்புகளின் முன்னோடி-பியேர் கியூரி (Pierre Curie) மறைந்த நாள்.
Reviewed by JAYASEELAN.K
on
08:34
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:34
Rating: 5


No comments: