கதை- *பிறரின் இன்ப, துன்பங்களில்..''
கதை-
*பிறரின் இன்ப, துன்பங்களில்..''
நாம் எல்லோரும் ஆசைகளோடு தான் வாழ்கிறோம். சில நேரங்களில் நமது ஆசைகளில் ஒன்று நடந்து விடும் போது, “அதனை நான் பெற ஆசைப்பட்டேன், எனக்குக் கிடைத்து விட்டது” என்று சொல்லி அந்த ஆசையை அம்பலப்படுத்துகிறோம்.
ஆனால், பல ஆசைகளைப் பலரும் வெளியில் சொல்வதில்லை..
ஆனால்,ஆசைகள் நம் எண்ணத்தில் எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றால்..?
மெழுகுவர்த்தி தான் உருகி அனைவருக்கும் வெளிச்சத்தைக் கொடுத்து, கரைந்து காணாமல் போகிறது. அது போல் உருக ஆசை!!
ஒரு கப்பல் மூழ்கப் போகிறது என்றால் அதன் கேப்டன் அதில் உள்ள எல்லோரையும் தப்பிக்க வைக்க நினைப்பான்.அது முடியாத போது 'அந்த கப்பலோடு தானும் மூழ்கிப் போவான்
பயணிகளைக் காப்பாற்ற முடியலையே', 'கப்பலைக் காப்பாற்ற முடியலையே' என்று தன்னைத் தப்பிக்க நினைக்காது மூழ்கும் அந்த கேப்டனைப் போல் மூழ்க ஆசை!!
ஒரு விமானம் பறக்கிறது அதில் மொத்தம் 50 பேர் பயணிக்கிறார்கள்! அதில் மொத்தம் 49 பாராசூட்டுகள் தான் உள்ளன.விமானம் பழுது காரணமாக வெடிக்கப் போகிறது.
50-தாவது நபராகி பாராசூட்டை மற்றவர்களுக்கு கொடுக்க ஆசை!!
ஒரு படகில் சில பேர் பயணிக்கிறார்கள்! படகில் ஏதோ பிரச்சனை ஏற்பட்டு அதில் உள்ள பாரத்தை குறைக்க வேண்டும்!அந்த படகில் இருந்து ஒருவர் கடலில் குதித்து விட்டால் மற்றவர்கள் பிழைத்துக் கொள்ளலாம்! அந்த ஒருவனாக இருக்கக் கொள்ளை ஆசை..
இந்த சின்னச் சின்ன ஆசைகள் சொல்லும் கருத்து என்னவென்றால்..!
ஒவ்வொரு ஆசைகளுக்கும் பிண்ணியில் சிலர் செய்த ஒப்பற்ற தியாகங்கள் அடங்கி நிற்கின்றன.
நாம் இந்த பூமியில் இருப்பதின் லட்சியம், நாம் வாழ மட்டும் இல்லை. மற்றவர்கள் வாழ நம்மால் ஏதாவது செய்ய வேண்டும்.
இதில் இருந்து நாம் எப்படி வேறுபட்டு நிற்கிறோம் என்பதே இங்கு கேள்வி.
ஒரு சிலரே தங்களை உருக்கி மற்றவர்களுக்கு வெளிச்சமாக இருக்கும் மெழுகுவர்த்தியாக வாழ்ந்தார்கள்.
இன்று நாம் அனுபவிப்பது எல்லாம் இவர்கள் தங்களை உருக்கி நமக்குப் போட்ட பிச்சைகளே.
நாமும் வெறும் வெளிச்சத்தை நுகரும் ஒரு சராசரி மனிதனாக நாம் வாழாமல்,
நாமும் பிறருக்காக ஓளி வீசுவோம். பிறரின் இன்ப, துன்பங்களில் பங்கு ஏற்போம்..
அதுவே உலகில் நாம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் ஆகும்.....

No comments: