கம்பியற்ற மின்னூட்டி(Wireless charger) எப்படி வேலை செய்கிறது?
கம்பியற்ற மின்னூட்டி(Wireless charger) எப்படி வேலை செய்கிறது?
Samsung galaxy s10, Sony xperia xz3, nokia 9 , google pixel 3 போன்ற பல திறன்பேசிகள் கம்பியில்லா மின்னூட்டி (wireless charger) இல் மின்னூட்டம்(charge) ஆவதை பார்த்து இருப்பீர்கள்.
இந்த கம்பியற்ற மின்னூட்டிகள் எப்படி வேலை செய்கின்றன? அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் என்ன ?
மின்னியலில் தூண்டல் (induction ) என்ற ஒரு விஷயம் உண்டு.
வகுப்பில் ஒரு மாணவன் சுசு போனால் மற்றவருக்கும் சுசு வருவதை போல, யாராவது கொட்டாவி விட்டால் பக்கத்தில் இருக்கும் நமக்கும் கொட்டாவி வருவது போல ஒரு நிகழ்வு இது.
அதாவது ஒரு சுருளை (coil) எடுத்து கொண்டு அதில் மாறுதிசை மின்னோட்டம் (AC curent) கொடுத்தால் அந்த சுருளில் ஒரு மின்காந்த பாயம் ( electro magnetic flux) உண்டாகி காற்றில் கொஞ்சம் தூரம் கண்ணுக்கு தெரியாமல் அலைந்து கொண்டு இருக்கும்.
அந்த காந்த அலைகள் அலையும் எல்லையில் இன்னொரு சுருளை கொண்டு வந்து வைத்தால் அதில் அந்த காந்த புலன்கள் விட்டு விட்டு வெட்டுவதால் சுருளில் மின்சாரம் உண்டாகும். (பொதுவாகவே காந்த புலத்தில் வேகமாக கடத்தி கடந்தாலோ அல்லது கடத்தி உள்ள இடத்தில் காந்த புலம் வேகமாக கடந்தாலோ மின்சாரம் உண்டாகும்) இந்த நிகழ்வுக்கு பெயர் தான் தூண்டல்.
நாம் பார்க்கும் டிரான்ஸ்பார்மர்கள் (இயக்குனர் மைக்கேல் பே எடுத்த மொக்கை ஹாலிவுட் படங்கள் அல்ல இது வேறு) எனப்படும்.
மின்மாற்றிகள் மற்றும் தூண்டல் அடுப்பு(induction stove) எல்லாமே வேலை செய்வது இந்த தத்துவத்தில் தான்.
திறன்பேசியில் கம்பியற்ற மின்னூட்டியில் ஒரு சுருளில் ஏசி (AC) மின்சாரம் செலுத்த படும். அதில் உண்டாகும் மின்காந்த பாயத்தின் (electro magnatic flux) எல்லையில் திறன்பேசியில் நாம் வைக்கும் போது திறன்பேசிக்குள் இருக்கும் சிறிய சுருளில் தூண்டல் (induction) நடந்து மின்சாரம் உண்டாகிறது. உள்ளே உள்ள மின்சுற்றுப் பலகையில் (circuit board) அதை டிசி (DC) (DC காமிக்ஸ் படங்கள் அல்ல) மின்சாரமாக மாற்றி திறன்பேசியின் மின்கலத்திற்கு மின்னூட்டம் செய்கிறது.
அப்புறம்....
Wireless சார்ஜரை வீட்டில் வைத்து விட்டு 20 கிலோமீட்டர் தள்ளி உள்ள உங்கள் ஆபிஸில் சார்ஜ் பண்ணலாமா??..
Wireless மின்சாரத்தை பல நூறு கிலோ மீட்டர்வரை கூட கடத்தலாமா??....என்று கேட்டால்....
நிகோலா டெஸ்லா இருந்திருந்தால் கம்பியில்லா மின்சாரமே வந்திருக்கும்.


No comments: