இரத்த தானம் வழங்கிய அரசு பள்ளி ஜே.ஆர்.சி ஆசிரியர்கள்...
இரத்த தானம் வழங்கிய அரசு பள்ளி ஜே.ஆர்.சி ஆசிரியர்கள்...
சேலம் மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் கிளை சார்பில் இன்று (7.5.2020 )மாவட்ட ஆட்சியர் திரு ராமன், முதன்மை கல்வி அலுவலர் திரு .கணேஷ் மூர்த்தி, ரெட் கிராஸ் துணை தலைவர் அணில், ரெட் கிராஸ் உறுப்பினர் திரு. ஹரிஹரன் ஆகியோர் முன்னிலையில் அரசு பள்ளிகளை சேர்ந்த 22 ஜே. ஆர் சி ஆலோசகர்கள் 22 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினார்கள் இரத்த தானம் வழங்கிய ஜே.ஆர்.சி ஆலோசகர்களுக்கு மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
மேலும் அரசு மருத்துவமனைக்கு ஆயிரம் புல் பாடி கிட் மற்றும் ஆயிரம் கையுறைகள் வழங்கப்பட்டன.இந்நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை மாவட்ட ஜே.ஆர்.சி.கன்வீனர் பிரபாகர் செய்திருந்தார்.


No comments: