பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை தவறவிட்ட மாணவர்கள்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு.!
பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை தவறவிட்ட மாணவர்கள்.. அதிரடி உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு.!
பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் மற்றும் கணக்கு பதிவில் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்வை தவறவிட்ட காரணம் குறிப்பிட்டு மீண்டும் எழுத விருப்பம் தெரிவித்து தலைமை ஆசிரியருக்கு கடிதம் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் விருப்பத்தை பரிசீலித்து தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்புகள் வழங்கி, மாணவர்களின் எதிர்காலத்தை மென்மேலும் உயர்த்த உதவி செய்யும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பன்னிரண்டாம் வகுப்பு வேதியியல் மற்றும் கணக்கு பதிவியல் தேர்வுகளை சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பேருந்து கிடைக்காத காரணம் மற்றும் தேர்விற்கு மறுநாள் ஊரடங்கு போன்ற பிரச்சனைகளின் காரணமாக தேர்வு இயலாத சூழல் ஏற்பட்டது.
இதன் அடிப்படையில் அடுத்தடுத்து எழுந்த புகார்கள் மற்றும் வேண்டுகோளின் அடிப்படையில், தமிழக அரசு மறுவாய்ப்பு அளித்துள்ளது. இந்த விருப்ப தேர்வுகளின் பட்டியலை பள்ளியின் தலைமை ஆசிரியர் மாவட்ட தேர்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


No comments: