சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை...செய்தித்தாள் தகவல்..
சுதந்திர தின கலை நிகழ்ச்சிகள் மாணவர்கள் பங்கேற்கத் தேவையில்லை...
சென்னை, ஆக. 9 சுதந்திர தினத்தை ஒட்டி, கலை நிகழ்ச்சிகள் பள்ளி மாண வர்கள் பங்கேற்கத் தேவையில்லை என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக, அனைத்து மாவட்ட ஆட்சி யர்களுக்கும் பொதுத் துறை முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார் கடிதம் எழு தியுள்ளார். அதன் விவரம்:
நாட்டின் சுதந்திர தினம் வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது கரோனா நோய்த் தொற்று காரணமாக இந்த விழாவில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு தனது கடிதத்தின் வாயிலாகத் தெரிவித் துள்ளது
எனவே, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதை போன்ற நிகழ்வுகளை மாவட்டங்களில் நடத்துவது சிரமமான காரியமாகும். இதைக் கருத்தில் கொண்டு காவல் துறையினர் மரியாதையை மட்டும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நிகழ்வை நடத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகின் றனர்
மாணவர்கள் பங்கேற்பு:
சுதந்திர தின கொண்டாட்டங்களில் பள்ளி மாணவர் கள், குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு நடத்த வேண்டிய தேவை யில்லை
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடை பெறும் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் 500-க்கும் குறைவான எண் ணிக்கையைக் கொண்ட பார்வையாளர் கள் மட்டுமே பங்கேற்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்..
CLICK HERE TO DOWNLOAD
CLICK HERE TO DOWNLOAD


No comments: