Home
OCTOBER
அக்டோபர் -17. மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை ஆராய்ச்சி செய்தவர் -குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் நினைவு தினம்.
அக்டோபர் -17. மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை ஆராய்ச்சி செய்தவர் -குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் நினைவு தினம்.
10:42
Read
மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை ஆராய்ச்சி செய்தவர் -குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் நினைவு தினம்.
பிறப்பு:-
கிழக்கு பிரஷ்யாவின் கோனிஸ்பர்க் நகரில் மார்ச்-12,1824 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கோயின்க்ஸ்பேர்க்கில் கல்வி கற்றார். பிறகு அல்பெனிய பல்கலைக்கழகத்தில் பயின்றார்.
1833 ஆம் ஆண்டில் கோனிஸ்ஸ்பெர்க் நகரில் ஒரு கணித-இயற்பியல் கருத்தரங்கை பிரான்சு நியூமன் மற்றும் ஜாகோபி ஆகியோருடன் இணைந்து உருவாக்கியதுடன், அவர்களது மாணவர்கள் ஆராய்ச்சியின் முறைகள் அறிமுகப்படுத்தினர். கிர்ஹோஃப் 1843 முதல் 1846 வரை நியூமன்-ஜாகோபிய கருத்தரங்கில் கலந்து கொண்டார்.
1847 இல் கோன்ஸ்பேர்க் பல்கலைக்கழகத்தில் கணித-இயற்பியலில் பட்டம் பெற்றார்.
பணிகள்:-
பிரஸ்லாவ் கல்வி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றினார்.
வேதியியல் களத்திலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கினார்.
கண்டுபிடிப்புகள்:-
மின் சர்க்யூட்:-
கோனிஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் பயின்றபோதே, மின்னோட்டம் குறித்த முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். உலகப் புகழ் பெற்ற கிர்க்காஃப் மின்சுற்று விதிகளை 21 வயதில் வெளியிட்டார். இது மின்னோட்டம், மின்னழுத்தம், மின்சார நெட்வொர்க்குகளில் ஏற்படும் தடைகள் ஆகியவற்றை கணக்கிடப் பயன்பட்டது.
நிறப்பிரிகை:-
ஜெர்மனி வேதியியலாளர் ராபர்ட் புன்சனுடன் இணைந்து நிறமாலையியல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 1854-ல் இருவரும் இணைந்து சீசியம், ருபீடியம் ஆகிய தனிமங்களைக் கண்டறிந்தனர். இவை மின் பொறியியல் துறைக்கு மிகவும் பயன்படும் தனிமங்களாகத் திகழ்கின்றன.
வெப்பக் கதிர் வீச்சு:-
மின்கடத்தி மூலம் ஒளியின் வேகத்தில் மின்சாரம் பாய்கிறது என்பதை 1857-ல் முதன்முதலாக கண்டறிந்து கூறினார். வெப்ப வேதியியல் தொடர்பாக பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.
பொருட்களில் வெப்ப மாறுபாடுகளால் உண்டாகும் வேதி வினை குறித்து ஆராய்ந்தவர், 1859-ல் வெப்பக் கதிர்வீச்சு விதிகளை வெளியிட்டார். ஒரு பொருளில் இருந்து அதன் வெப்பநிலை காரணமாக கதிர்வீச்சு முறையில் ஆற்றல் வெளிப்படுகிறது என்பதை விளக்கினார். இதை 1861-ல் நிரூபித்தார்.
தன் மீது விழும் அனைத்து மின்காந்தக் கதிர்வீச்சையும் ஈர்த்துக்கொள்ளும் தன்மையுடைய ‘கரும்பொருள்’, கதிர்வீச்சின் நிறமாலைக்கு ஏற்ப வெப்பத்தை உமிழ்கிறது எனக் கண்டறிந்தார். இதற்கு ‘கரும்பொருள் கதிர்வீச்சு’ என்ற பதத்தை 1862-ல் முதன்முதலாக பயன்படுத்தினார். இவரது இந்த ஆய்வுகள் குவான்டம் விசையியல் துறை உருவாக வழிவகுத்தது.
கட்டுரைகள்:-
கணித இயற்பியல் துறையில் இவரது விரிவுரைகள், ஆராய்ச்சிக் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு 4 தொகுதிகள் கொண்ட நூலாக வெளியிடப்பட்டது.
விருதுகள்:-
ரம்ஃபோர்டு பதக்கம்- (1862),
டேவி மேடல்-(1877),
மேட்டீசிக் பதக்கம்- (1877), ஜான்சன் பதக்கம்- (1887) போன்ற விருதுகளை பெற்றார்.
மறைவு:-
அக்டோபர்-17, 1887 ஆம் ஆண்டு பெர்லின், இடாய்ச்சுலாந்தில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
சந்திரனில் உள்ள ஒரு பள்ளத்துக்கு
கிர்க்காஃப் என்று பெயரிடப்பட்டது.
பிரபலமான சுயசரிதைகள் பட்டியலில் 90 வது இடம் பிடித்தார்.
அக்டோபர் -17. மின் சர்க்யூட், நிறப்பிரிகை, வெப்பக் கதிர்வீச்சு தொடர்பான விதிகளை ஆராய்ச்சி செய்தவர் -குஸ்டவ் ராபர்ட் கிர்க்காஃப் நினைவு தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
10:42
Rating: 5
Tags :
OCTOBER

No comments: