வாழ்க்கை பற்றிய சிந்தனை...
வாழ்க்கை
கடல் போன்றது.
*கடலில் அலைகள்*
*காலம் நேரம்*
*மாறி மாறி எழுகின்றன.*
*வாழ்க்கையில்*
*இன்பம் துன்பம்*
*மாறி மாறி வரும்*
*அதை எதிர்த்து*
*செல்லும் மன வலிமை*
*எல்லோருக்கும் வேண்டும்.*
*எதை ஒன்றை*
*செய்யும் முன்*
*நம்பிக்கையோடு செய்.*
*பின்வரும் காலங்களில்*
*அதுவே மிகப்பெரிய*
*வெற்றியை தரும்.*
*சந்தேகப்படாதே!*
*சங்கடத்தை உருவாக்கும்.*
*மனிதனுக்கு ஒரே மாதிரி*
*வாழ்க்கை அமைவது இல்லை.*
*அவரவர் சூழ்நிலைக்கு*
*ஏற்ப நடக்கின்றன.*
*சந்தோசப்படு!*
*மன நிம்மதி தரும்.*
*பணக்காரனாக இருப்பினும்*
*அது நிரந்தரம் அல்ல*
*இதுவும் கடந்து போகும்.*
*ஏழையாக இருப்பினும்*
*எப்போது வேண்டுமானாலும்*
*அவன் நிலை உயரலாம்*
*அனைவர்க்கும் மதிப்பு கொடு.*
*சுகமாக வாழும் போதே*
*துக்கத்தையும் பழகி*
*கொள்ள வேண்டும்.*
*ஏனென்றால்*
*வாழ்க்கையின் ஏற்ற*
*இறக்கங்களே*
*சுகமும் துக்கமும் தான்.*
*மனிதனுக்கு இது*
*மாறி மாறி வரும்.*
🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

No comments: