Breaking

செப்டம்பர்-14. சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்.

செப்டம்பர்-14.
சர்வதேச கலாச்சார ஒற்றுமை தினம்.

ஒருவருக்கு ஒருவர் நேசம் பாராட்டுவது என்பது உலக மக்கள் யாவரும் அன்பு என்னும் ஒரு குடையின் கீழ் மகிழ்ச்சி என்னும் விருந்துண்ணும் பண்புக்கு ஒப்பாகும்.

அந்த வகையில் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு நாட்டினரும்,  பல்வேறு மொழி கலாச்சாரப் பண்புகளை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள் என்பத நாம் அறிவோம்.

நமது பாரத நாடும் பழம் பெருமைமிக்க கலாச்சாரப் பண்புகளால் உலக அரங்கில் தலை சிறந்தே விளங்கி வருகிறது. அவற்றுள் நம் தாய்மொழியாம் தமிழ்மொழித் தேரில் "கலாச்சாரம்"  கலசமாய் மின்னுவது என்பது வெகு சிறப்பு.

குறிப்பாக செல்லும் இடமெல்லாம் சீர் நிறுத்தி பேர் பெறுவது நமது தமிழ் கலாச்சாரம். குறிப்பாக சொல்ல வேண்டுமாயின் பிரான்ஸ் தேசத்தில் இந்திய மொழி மற்றும் கலாச்சாரம் பெயரில் ஒரு சங்கம் அரசின் அனுமதியோடு அதன் உதவியும் பெற்று நாங்கள் உருவாக்கி செய்ல்பட்டும் வருகிறோம்.

"அனைத்து நாடுகள் கலாச்சார ஒற்றுமை தினம்" ஓங்கி செயல் பட்டு சிறப்புற இது போன்ற பல நாடுகள் அனுமதியும் வாய்ப்பும் வழங்கி  வருவது மிகவும் போற்றுதலுக்குரியது.  இத்தகைய சிறப்புமிக்க நாளில்  அனைத்து நாடுகள் கலாச்சாரம் ஒற்றுமை தினம்  சிறப்புற நாமும் வாழ்த்துவோமே!

No comments:

Powered by Blogger.