Home
DECEMBER
டிசம்பர்:- 19. தொலைத்தொடர்பு துறையின் பிதாமகராகப் போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் பிறந்த தினம்.
டிசம்பர்:- 19. தொலைத்தொடர்பு துறையின் பிதாமகராகப் போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் பிறந்த தினம்.
08:55
Read
டிசம்பர்:- 19.
தொலைத்தொடர்பு துறையின் பிதாமகராகப் போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் பிறந்த தினம்.
ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள எக்முல் கிராமத்தில் (1901) பிறந்தார். தந்தை ராயல் பவேரியன் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர். அவருடன் அலுவலகம் சென்றபோது அங்கிருந்த டெலிகிராபி கருவி இவரை ஈர்த்தது. அங்கு போகும்போதெல்லாம் அதையே பார்த்துக்கொண்டிருப்பார்.
செக் குடியரசில் உள்ள செப் என்ற இடத்துக்கு அப்பா மாற்றலானதால் அங்கேயே இவரது ஆரம்பக் கல்வி தொடங்கியது. மொழிப் பாடங்கள், விருப்பம் இல்லாத மற்ற பாடங்களில் சராசரி மதிப்பெண்தான் வாங்குவார். ஆனால், விருப்பமான அறிவியல், கணிதத்தில் அதிக மதிப்பெண்களைக் குவித்தார்.
மூனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியலில் டிப்ளமோ பெற்றார். 1923-ல் எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். மின் சாதனங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார்.
வீடியோ கேமரா ட்யூபை முதன்முதலாக கண்டறிந்தார். ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொலைநகல் சாதனத்தின் முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் (Hellschreiber) என்ற கருவியை 1920-ல் கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களால் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. ஃபேக்ஸ், டெலக்ஸ், கலர் ஸ்கேனர் ஆகியவற்றுக்கு இதுவே முன்னோடி.
விமானப் போக்குவரத்துக்கான ரேடியோ திசை காட்டும் கருவி குறித்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி 1927-ல் முனைவர் பட்டம் பெற்றார். விமானத்துக்கான தானியங்கி வழிகாட்டி உள்ளிட்ட கருவிகளைக் கண்டறிய இவரது ஆராய்ச்சி அடிப்படையாக அமைந்தது.
இவரது ‘ஹெல் ரெக்கார்டர்’ கருவி, தகவல் தொடர்பு துறையில் பெரும் வரவேற்பை பெற்றதால், 1929-ல் சொந்த நிறுவனம் தொடங்கினார். தவறுகளைத் திருத்துதல், ஒருங்கிணைத்தல் போன்ற பிரச்சினைகளைக் கையாளும் அமைப்புடன் இக்கருவி வடிவமைக்கப்பட்டது.
செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவரை இது முழுமையாக ஒருங்கிணைக்காவிட்டாலும்கூட, தெளிவாகப் படிக்க ஏதுவாக, காகித நாடாவில் ஒவ்வொரு வார்த்தையும் 2 முறை அச்சிடும்படி வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற பிரத்யேக அம்சங்களால், செய்தி நிறுவனங்கள், தபால் அலுவலகங்கள் மட்டுமின்றி, காவல் துறையிலும் இக்கருவி பிரபலமடைந்தது. இதன் வேகமும் நம்பகத்தன்மையும் இதை உலகம் முழுவதும் பிரபலமடையச் செய்தன.
1931-ல் இரண்டாம் உலகப் போரின்போது குறியீட்டு இயந்திரங்களைத் தயாரித்தார். அடுத்த ஆண்டு எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஹெலிகல் ஸ்கேன் பிரின்ட் சிஸ்டம் என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.
பெர்லினில் இருந்த இவரது தொழிற்சாலை 1940-ல் இரண்டாம் உலகப் போரில் தாக்குதலுக்கு உள்ளானது. தளர்ந்துவிடாத அவர், தனது தொழிலை 1947-ல் மீண்டும் தொடங்கினார். கிளிஸ்கோகிராஃப், கோலோகிராஃப், டைப்செட்டிங் இயந்திரம் உட்பட பலவற்றை உருவாக்கினார். 1989 வரை பல்வேறு கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.
வியன்னா போட்டோகிராஃபிக் சொசைட்டியின் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். பல நாடுகள் இவருக்கு கவுரவ குடியுரிமை வழங்கின. தொலைத்தொடர்பு துறையின் பிதாமகராகப் போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் நூறாண்டு வாழ்க்கையைப் பூர்த்தி செய்து 2002-ல் மறைந்தார்.
டிசம்பர்:- 19. தொலைத்தொடர்பு துறையின் பிதாமகராகப் போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் பிறந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
08:55
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
08:55
Rating: 5
Tags :
DECEMBER


No comments: