Breaking

மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வரைவு விதிமுறைகள்..







மத்திய அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வரைவு விதிமுறைகள்..

பணியாளர் நல அமைச்சகம் வெளியீடு

நாட்டின் பொது முடக்கம் நிறைவடைந்த பிறகு அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் வகையிலான வரைவு விதிமுறைகளை மத்திய பணியாளர் நல அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது நோய்தொற்று பரவலை கட்டுக்குள் வைக்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் பொது முடக்கம் அமுல் படுத்தப்பட்டது அரசு அலுவலகங்கள் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன பெரும்பாலான அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றி வந்தனர் நோய் தொடர்பாக மேலும் சில மாதங்களுக்கு நீடிக்கும் என்பதால் பொதுமக்கள் நிறைவடைந்த பிறகு அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கான வரைவு விதிமுறைகளை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வியாழக்கிழமை வெளியிட்டது. இதுதொடர்பாக மத்திய அரசின் துறைகளுக்கு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

கரானோ நோய் தொற்று பரவி வரும் சூழலில் சமூக இடைவெளியை உறுதி செய்யும் பெரும்பாலான அமைச்சகங்களின் ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றும் சூழல் ஏற்பட்டது இந்த காலகட்டத்தில் காணொளி மின் ஆளுமை உள்ளிட்ட வசதிகளை பயன்படுத்தி மத்திய அரசுத்துறைகள் சிறப்பாக செயல்பட்டனர். இனிவரும் காலங்களில் பணியிடங்களில் சமூக இடைவெளியை உறுதிசெய்யவும் நோக்கில் ஊழியர்களின் வருகையை குறைத்தல் மணி நேரங்களை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன மேலும் தகுதியான ஊழியர்களுக்கு கொள்கை அடிப்படையில் ஆண்டுதோறும் 10 நாட்கள் வீட்டில் இருந்து பணியாற்றும் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் எனவே ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற நிலையில் அரசின் கோப்புகள் தகவல்களை பாதுகாப்புடன் கையாள்வது உள்ளிட்டவை தொடர்பாக உரிய விதிமுறைகளை வகுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது



கோப்பு ஏற்பாடுகள் வீட்டிலிருந்தே பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பந்தப்பட்ட துறைகள் சார்பாக மடிக்கணினி அல்லது மேஜை கணினி வழங்கப்பட வேண்டும் அந்த கணினிகள் ஊடுருவ முடியாத வகையில் பாதுகாப்புடன் உள்ளனவா என்பதை தேசிய தொழில்நுட்ப மையம் உறுதி செய்ய வேண்டும் சொந்த கணினிகளை அலுவலக பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் ஊழியர்கள் அவற்றின் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

 வீட்டில் இருந்து பணியாற்றும் போது  இணைய வசதிகள் ஆகும் செலவுகளை ஊழியர்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம் நாடாளுமன்றம் தொடர்பான கோப்புகளை ஊழியர்கள் கையாள்வதற்காக கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்

காணொளிக்காட்சி வசதி துறைகளுக்கு இடையே தகவல்கள் கோப்புகளைப் பரிமாறிக் கொள்வதற்கான வசதிகள் தேசிய தொழில்நுட்ப மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன காணொலி காட்சி வாயிலாக உரையாடும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது அதன் வாயிலாக கூட்டங்களை நடத்திக் கொள்ளலாம் இந்த வரைவு விதிமுறைகள் தொடர்பான கருத்துக்களை அனைத்து துறைகளுக்கும் வரும் 21-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Powered by Blogger.