விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சென்னை எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன்
விக்ரம் லேண்டர், கடந்த சில மாதங்களுக்கு முன் வரை இந்தியா முழுக்க இது பற்றித்தான் பேச்சாக இருந்தது. சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டர் நிலவில் இறங்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் நிலவிற்கு அருகில் 2 கிமீ தூரத்தில் இருக்கும் போது அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் நிலவின் தென் துருவ பகுதியில் விழுந்து நொறுங்கிய சந்திரயான் 2ன் விக்ரம் லேண்டரை நாசா கண்டுபிடித்துள்ளது. இந்த விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க நாசாவிற்கு உதவியதே சண்முக சுப்ரமணியன் என்ற தமிழர்தான்.
இந்த நிலையில் தற்போது உலகம் முழுக்க சென்னையை சேர்ந்த எஞ்சினியர் சண்முக சுப்ரமணியன் பெரிய அளவில் வைரலாகி உள்ளார். இவருக்கு தற்போது இணையத்தில் பலர் வாழ்த்து மழை பொழிந்து வருகிறார்கள். நாசாவுக்கே ஐடியா கொடுத்த தமிழர் என்று இவரை பலரும் புகழ்ந்து வருகிறார்கள்.


No comments: