Breaking

திருக்குறள் மற்றும் விளக்கம், விளக்க உரை பற்றி அறிவோம்


திருக்குறள்..

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

இன்மை புகுத்தி விடும்.


மணக்குடவர் உரை 

முயற்சி செல்வத்தை உண்டாக்கும்: முயலாமை வறுமையை உண்டாக்கும். இது செல்வமும் நல்குரவும் இவற்றாலே வருமென்றது.

மு.வரதராசனார் உரை 

முயற்சி ஒருவனுக்குச் செல்வத்தைப் பெருகச் செய்யும், முயற்சி இல்லாதிருத்தல் அவனுக்கு வறுமையைச் சேர்த்துவிடும்.

மு.கருணாநிதி உரை 

முயற்சி இல்லாமல் எதுவும் இல்லை. முயற்சிதான் சிறப்பான செயல்பாடுகளுக்குக் காரணமாக அமையும்.

சாலமன் பாப்பையா உரை 

முயற்சி செல்வத்தைச் சேர்க்கும்; முயலாமல் இருப்பது வறுமைக்குள் சேர்ந்து விடும்.

ஆங்கில மொழிபெயர்ப்பு 

Effort brings fortune's sure increase, 
Its absence brings to nothingness.

ஆங்கில உரை 

Labour will produce wealth; idleness will bring poverty.

No comments:

Powered by Blogger.